முஸ்லீம்களின் வாக்கு வங்கிக்காக ஏழை ஹிந்துவும், விவசாயிகளும், பட்டினியில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது-ஷியாம் கிருஷ்ணசாமி!

முஸ்லீம்களின் வாக்கு வங்கிக்காக ஏழை ஹிந்துவும், விவசாயிகளும், பட்டினியில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது-ஷியாம் கிருஷ்ணசாமி!

Share it if you like it

இந்து, கிறிஸ்தவ, புத்தம், மற்றும் சீக்கிய மக்கள், வீதிகளில் இறங்கி ஜமாத் போல் எங்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் என்று கேட்டால் தமிழகத்தின் நிலை என்னவாகும் ஷியாம்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக சமூக ஆர்வலர்கள் கிருமி நாசினி திரவம், மருத்துவ உபகரணங்கள், உணவுகள், என்று ஏழைகளின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கி வருகின்றனர்.

ஹிந்து அமைப்புகள் பல்லாண்டு காலமாக திமுக, அதிமுக, இரண்டு அரசிடமும்  அரிசி, கேழ்வரகு, போன்ற தானியங்கள் எங்களுக்கும் வழங்குங்கள் அதன் மூலம் ஏழைகளுக்கு கூழாகவோ, கஞ்சியாகவோ, வழங்குவோம் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில்.

புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

ஏராளமான மக்கள் உணவு இல்லாமல், போராடிக்கொண்டிருக்கும் போது, தங்கள் வாக்கு வங்கியைப் பாதுகாக்க முஸ்லிம்களுக்கு, அதிமுக அரசு அரிசி கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நெல் பயிரிட்ட விவசாயிகள் பசியுடன் இருக்கும்போது, 5480 மெட்ரிக் டன் அரிசியைப் விவசாயிகளுக்கு சரிசமமாக வழங்கியிருக்கலாம் ”

இந்து, கிறிஸ்தவ, புத்தம், மற்றும் சீக்கிய மக்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்புத் தெரிவிக்கும் அல்லது நீதிமன்றங்களை அவர்கள் நாடும் சூழ்நிலையை இது உருவாக்கும்.

இந்துக்கள் கோயில்களுக்கு நன்கொடை வழங்குகிறார்கள். இந்து அறநிலையத்துறை முதல்வரின் நிவாரண நிதிக்கு 10 கோடி, நன்கொடை அளிக்கிறது. ஏழை ஹிந்துவும், விவசாயிகளும், பட்டினியில் இருக்கின்றனர், என்று ஷியாம் கூறியுள்ளதற்கு நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it