மெரினாவில் நாளை கொடி ஏற்றுகிறார் கவர்னர் பன்வாரிலால் புரோகித் !

மெரினாவில் நாளை கொடி ஏற்றுகிறார் கவர்னர் பன்வாரிலால் புரோகித் !

Share it if you like it

இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசனம் அமலுக்கு வந்த தினமான ஜனவரி 26-ந் தேதி, குடியரசு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு நாளை(ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தின விழா நடத்தப்படுகிறது.
நாளை காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்தப் பகுதியில் மலர் தூவும்.அதைத் தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார்.


Share it if you like it