மோடிக்கு ‘கோல்டன் ட்வீட்’ விருது

மோடிக்கு ‘கோல்டன் ட்வீட்’ விருது

Share it if you like it

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘கோல்டன் ட்வீட் விருது வழங்கப்படும் என ட்விட்டர் இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகப்பேரால் ரிடிவீட் செய்யப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார், அது அதிகம்பேரால் பகிரப்பட்டது. இதற்காக இந்த விருது தற்போது அறிவிக்கட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத்துறையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி மற்றும் தோனி பற்றிய ஹேஷ்டேகுகள் அதிகம்பேரால் பகிரப்பட்டுள்ளன.  மேலும் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய நிகழ்வில் சந்திராயன்-2 பற்றிய ஹேஷ்டேக்குகள் அதிகப்பேரால் பகிரப்பட்டுள்ளன.


Share it if you like it