ரஜினியை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை – ரசிகர்கள் பதிலடி !

ரஜினியை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை – ரசிகர்கள் பதிலடி !

Share it if you like it

விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தொல்.திருமாவளவன் நடிகர் ரஜினியை விமர்சித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 70 வயதுவரை நடித்து முடித்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர விரும்பும்போது, 30 ஆண்டுகளாக மக்கள் தொண்டாற்றும் நாங்கள் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்று கூறியுள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது.

30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தொல்.திருமாவளவன் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார். மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தையும் மக்களை திசை திருப்பி அதில் அரசியல் செய்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கை பிழைப்பை நடத்தும் திருமாவளவனுக்கு, தான் ஒரு நடிகராக இருந்தாலும்,மக்கள் பாதிப்படைந்தால் அவர்களை நேரில் சென்று சந்தித்து இழப்பீடு தொகையை வழங்கியும்,மக்களுக்காக குரல் கொடுத்து கண்டனம் தெரிவிக்கும் ரஜினியை பற்றி பேச திருமாவளவனுக்கு எந்த அருகதையும் கிடையாது என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் திருமாவளவனை கிழி கிழி என்று கிழிக்கின்றனர்.

“கண்ணா ஒருவர் எந்த துறையில் இருக்கிறார் என்பது முக்கியம் அல்ல; அவர் எந்த துறையில் இருந்தாலும் மக்களுக்காக சிந்தித்து குரல் கொடுப்பதே ஆக சிறந்தது
தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் கூட முதலில் திரைத்துறையில் இருந்து வந்து தான் அற்புதமாக ஆட்சி செய்து தற்பொழுது மக்களின் மனத்திரையில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்கள் என்று ரசிகர் ஒருவர் ரஜினி பாணியில் முகநூலில் பதிவிட்டுள்ள கருத்தை வரவேற்று ஷேர், லைக் செய்துள்ளார்கள்.


Share it if you like it