வறுமையில் தத்தளித்த வ.உ.சி குடும்பம் – உதவிகரம் நீட்டிய ஆர்.எஸ்.எஸ் !

வறுமையில் தத்தளித்த வ.உ.சி குடும்பம் – உதவிகரம் நீட்டிய ஆர்.எஸ்.எஸ் !

Share it if you like it

சென்னை பள்ளிக்கரணையில் பகுதியில் வசிக்கும் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும்.வ.உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் உறவினர் முறை பேரன் குடும்பத்தினர் வறுமையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் திரு பரமேஸ்வரன் அவர்கள் அவரது குடும்பத்தினருக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ செலவுக்கு சிறிது பணமும் கொடுத்து உதவினார்.

மேலும் கொரோனா நிவாரண பணிகளை உலகம் முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை சார்ந்தவர்கள் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தன் பணியை செவ்வனே செய்து வருகிறார்கள். இந்த அமைப்பானது மக்களுக்கு செய்யும் உதவியை மற்ற அமைப்புகள் போல் விளம்பரம் செய்வதில்லை என்பதால் இவர்கள் செய்யும் மிகப்பெரும் உதவியானது ஊடகங்கள் எடுத்துரைப்பது இல்லை. ஆனாலும் மக்கள் இந்த அமைப்பை பற்றி மிக நன்றாக புரிந்து வைத்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it