வாழ வைக்கும்  வாழையிலை குளியல்!

வாழ வைக்கும் வாழையிலை குளியல்!

Share it if you like it

  •  ஒரு நபருக்கு சுமார் 10லிருந்து 15 வரை உடல்நிலை வாழை இலை     தேவைப்படுகிறது.
  •  வாழையிலை சிகிச்சையும் பகல் 12 மணிக்குள் செய்வது சிறப்பானதாகும். இச் சிகிச்சையின் போது படபடப்பு அதிகமாகத் தோன்றும். ஆனாலும் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
  •  இச்சிகிச்சையின் போது வியர்வை அளவிற்கதிகமாக வெளிப்படுவதால்,வாழையிலை குளியல் மேற்கொள்பவர் அதற்கு முன்பு தன்னால் முடிந்த அளவிற்கு வயிறு நிறைய தூய பச்சைத் தண்ணீர் அருந்த வேண்டும்.
  •  ஒரு சிறிய துண்டை குளிர்ந்த தண்ணீரில் நனைத்து, அதனை தலைப்பகுதியில் முன்டாக கட்டிக் கொள்ளவும். பனியன் பேண்ட் என எதுவும் வேண்டாம் ஜட்டி, அல்லது கோவணம் சிறப்பானது.
  •  நன்றாக வெயில் படும் இடத்தில் ஒரு பாயை விரித்து, அதன்மீது வேஷ்டியை போன்ற ஒரு துணியை தண்ணீரில் நனைத்து விரித்து விடவும்.(மொட்டை மாடியில் கூட இந்த சிகிச்சை மேற்கொள்ளலாம்).
  • தண்ணீரில் நனைத்து விரித்து துணியின் மீது, வாழை இலைகளைப் பரப்பி விடவும், பரப்பி வைத்த வாழை இலையின் மீது சிகிச்சை தேவைப்படும் நபரை படுக்க வைத்து, அவர் வயிறு, மார்பு, தலை, கால் பகுதி என உடல் முழுவதும் வாழை இலையை வைத்து மூடி,உடலுக்குள் காற்றுப்புகாத அளவிற்கு வாழை நார் கொண்டு கட்டி விடவும்.மூக்குப் பகுதியில் மட்டும் சிறு துளை ஏற்படுத்தி தரவும்.
  •  சுமார் 20 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை வாழை இலைக்குள் இருக்கலாம். இடையிலேயே சிலர் முடியவில்லை என்றால், உடனே கட்டுக்களை அவிழ்த்து விட்டு விட வேண்டும்.
  • வாழையிலைக்குள் இருந்த நபரின் உடலிலிருந்து சுமார் அரை லிட்டரிலிருந்து ஒரு லிட்டர் வரை வியர்வை வந்திருப்பதைபார்க்க முடியும்.அவர் உடல் சலவை செய்தது போன்று கழிவுகள் கெட்ட நீர் எல்லாம் வெளியேறி பளிச்சென்று குளித்ததுபோல் காணப்படுவார்.
  • நபரை உடனே காற்றோட்டமுள்ள நிழலில் சுமார் அரை மணி நேரம் வரை ஓய்வெடுக்க வைத்த பின்பு, குளிர்ந்த அல்லது சாதாரண பச்சை தண்ணீரில் குளிக்க செய்யலாம்.
  •  உடல் எடை பருமனாக உள்ளவர்களுக்கு, உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த சிகிச்சையாக திகழ்கிறது. எல்லாவிதமான கடுமையான நோய்களுக்கு நல்ல பலனைத் தருகிறது.
  • சிகிச்சைக்கு பயன்படுத்திய வாழை இலையில் விஷமேறி இருப்பதால் ஆடு மாடுகளுக்கு உணவாக கொடுப்பதோ? செடிகளுக்கு உரம் இடுவது கூடாது.
  • வாழையிலை மலிவாக கிடைக்கும் காலத்தில் வீட்டில் உள்ள அனைவருமே தனது மொட்டை மாடியில் இச்சிகிச்சையை மேற்கொண்டால், உடலில் இருந்து துர்நீர்கள் வெளியேறி ஆரோக்கியம் தானாகவே வெளிப்படும். சிறுநீரக குறைபாடு உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.

Share it if you like it