விசாகப்பட்டணத்தில் ரசாயண ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவால் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் பலி, ஆயிரம் பேர் பாதிப்பு !

விசாகப்பட்டணத்தில் ரசாயண ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவால் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் பலி, ஆயிரம் பேர் பாதிப்பு !

Share it if you like it

  • சற்றுமுன் விசாகப்பட்டணம் நகரில் உள்ள ஆர்.ஆர் வேங்கடபுரம் பகுதியில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால், அப்புகுதியில் இருந்த சுமார் ஆயிரம் பேர் மயக்கம், வாந்தி, மூச்சு திணறல், தலைவலி போன்ற உடல்நல குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் சென்றுகொண்டிருந்த 50-கும் மேற்பட்டோர் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.
  • இந்த விபத்தில் மருத்துவமனையில் 300-கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். அதில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றபட்டுள்ளனர்.


Share it if you like it