விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு…! தக்க ஏற்பாடு செய்து..! தமிழக அரசு உதவ  வேண்டும்….! இந்து முன்னணி கோரிக்கை..!

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு…! தக்க ஏற்பாடு செய்து..! தமிழக அரசு உதவ வேண்டும்….! இந்து முன்னணி கோரிக்கை..!

Share it if you like it

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. அதற்கு காரணம் கோவில்கள் தமிழகத்தில் திறக்கப்படாதது தான் என்று மக்கள் எண்ணுகிறார்கள். கோவில்கள் திறந்திருந்த பல மாநிலகளில் இன்று கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது.
இந்த சமயத்தில் முழு முதற் கடவுள் விநாயகரின் சதுர்த்தி விழா வருகிறது. மகாராஷ்டிராவின் முதலமைச்சர் திரு.உத்தவ் தாக்கரே விநாயகர் சதுர்த்தி விழாவினை தக்க ஏற்பாடுகளுடன் எளிமையாக நடத்தப்படும்  என்று கூறியுள்ளார்.
விநாகர் சதுர்த்தி மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும்.  எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்து முன்னணி இயக்கம் இந்த வருடம் கொரோனாவை விரட்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை சிறப்பாக எளிய முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தி விநாயகரிடம் முறையிட, கொரோனாவை விரட்ட, விழா சிறப்பாக நடத்த தமிழக அரசு வழிகாட்டி உதவ வேண்டுமென என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

Share it if you like it