வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு நிவாரணத் தொகை அறிவித்தார் -தமிழக முதல்வர்!

வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு நிவாரணத் தொகை அறிவித்தார் -தமிழக முதல்வர்!

Share it if you like it

அண்மையில் ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்ட எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீர மரணம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் வீர மரணம் அடைந்த மதியழகன் அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வழங்க ஆணையிட்டுள்ளார். எனது கணவர் நாட்டிற்காக உயிர் இழந்தது பெருமையாக உள்ளது என்று ராணுவ வீரரின் மனைவி கூறியுள்ளார். எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it