வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் இந்தியாவிற்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை- மத்திய அரசு அதிரடி!

வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் இந்தியாவிற்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை- மத்திய அரசு அதிரடி!

Share it if you like it

மத்திய, மாநில அரசுகளின் உத்தரவினை மீறி கடந்த மார்ச் முதல் வாரத்தில் தப்லீக் ஜமாத் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. நாடு முழுவதிலிருந்தும் 9 ஆயிரம் பேர் அம்மாநாட்டில் கலந்து கொண்டு தங்கள் இருப்பிடங்களுக்கு சென்று விட்டனர்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, என்று பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டனர். அரசின் அறிவுறுத்தலையும் மீறி வெளிநாட்டு இஸ்லாமியர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று தீவிர மதபிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.

அண்மையில் தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலா சாத் கந்தால்விடம்  சிபிஜ அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் 10 ஆண்டுகள் இந்தியாவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it