ஷியாம் கிருஷ்ணசாமி மற்றும் ஹெச். ராஜா..! தமிழக அரசின் முடிவிற்கு கடும் கண்டனம்…!

ஷியாம் கிருஷ்ணசாமி மற்றும் ஹெச். ராஜா..! தமிழக அரசின் முடிவிற்கு கடும் கண்டனம்…!

Share it if you like it

பொதுமக்கள் மற்றும் பல்துறை வல்லுனர்களின், ஆலோசனைகளை கருத்தில் கொண்டு. மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்தது. திராவிட இயக்கங்கள் நடத்தும் பள்ளி கூடங்களுக்கு, பலத்த அடி விழும் என்பதால். ஹிந்தி திணிப்பு என்கின்ற பெயரில் தங்களின், சுயநலத்திற்காக தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளனர். என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இது 1960கள் அல்ல. ஏற்கனவே திமுக முன்னனி தலைவர்கள் நடத்தும் மும்மொழி பள்ளிகள் பட்டியல் வெளியிட்டுள்ளேன். மேலும் தமிழகம் முழுவதும் திராவிட இயக்க தலைவர்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் பட்டியல் எடுக்கும்படி தேசிய சிந்தனையாளர்களிடம் கேட்டுள்ளேன்.இவர்களின் இரட்டை வேடம் கிழிக்கப்படும்

தமிழகத்தில் இன்று வரை தமிழே படிக்காமல் நம் குழந்தைகள் வளர்வதற்கு தேசிய கல்விக் கொள்கை முற்றுப்புள்ளி வைக்கிறது. இதை எதிர்ப்பது தமிழ் விரோதம். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதைப் படிப்பதை எதிர்ப்பது திராவிட விரோதம்.

டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமியும் தனது டுவிட்டர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தி மொழி கட்டாயமாக்கி தினிக்க கூடாது, விருப்பம் உள்ளவர்கள் படித்துக்கொள்ளட்டும் என்பது தான உங்க வாதம்?! விருப்பம் உள்ள மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் அந்த வாய்ப்பு வழங்குவதில் என்ன பிரச்சனை? இல்ல தனியார் பள்ளியில் பணம் கொடுத்து தான் படிக்கனுமா? தமிழக அரசின் முடிவு தவறானது.

https://twitter.com/SriSent48921438/status/1290176377723863042


Share it if you like it

One thought on “ஷியாம் கிருஷ்ணசாமி மற்றும் ஹெச். ராஜா..! தமிழக அரசின் முடிவிற்கு கடும் கண்டனம்…!

Comments are closed.