ஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்தாரா..? பழிவாங்கப்பட்ட மேனேஜருக்கு ஆதரவாக களமிறங்கும் வங்கி அலுவலர் சங்கத்தினர்

ஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்தாரா..? பழிவாங்கப்பட்ட மேனேஜருக்கு ஆதரவாக களமிறங்கும் வங்கி அலுவலர் சங்கத்தினர்

Share it if you like it

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சீனியர் மேனேஜரான, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் நாராயண்கம்ளே, 50, ஓய்வு பெற்ற டாக்டருக்கு, ஹிந்தி தெரியாது என்பதற்காக, கடன் தர மறுத்ததாக புகார் எழுந்தது.

உண்மையில், அவரது, 76 வயது காரணமாகவே, வங்கிக்கடன் மறுக்கப்பட்டுள்ளது. இவர் எந்த வங்கியில் முயற்சித்திருந்தாலும், கடன் பெறுவது கடினம்தான். இதை வங்கி மேலாளர் தரப்பில் கருத்து கேட்டு, எந்த ஊடகமும் வெளியிடவில்லை. இதற்கு தமிழக அரசியல்வாதிகள், ‘மொழி’ சாயம் பூசி பிரச்னையை திசை திருப்பி விட்டுள்ளதாக, வங்கி ஊழியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

அரசியல்வாதிகளின் வாயை அடைப்பதற்காவும், மொழி பிரச்னையை தவிர்ப்பதற்காகவும், வங்கி நிர்வாகம், வங்கி மேலாளர் மீது ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளதாக, பல்வேறு வங்கி அலுவலர் சங்கத்தினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என தமிழகத்தின் பிரபல பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது .


Share it if you like it