ஹிந்து கோவில் கதவில் கடவுள் மறுப்பாளர், கிறிஸ்துவ மிஷனரியின் உருவப்படம் !

ஹிந்து கோவில் கதவில் கடவுள் மறுப்பாளர், கிறிஸ்துவ மிஷனரியின் உருவப்படம் !

Share it if you like it

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே பிரசித்தி பெற்ற குலவிளக்கு அம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் நுழைவாயில் கதவில் ஈ.வே.ராமசாமி, தெரசா, அண்ணாதுரை, நேரு போன்றவர்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மொடக்குறிச்சி ஒன்றிய பாஜக தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரிடம் ஹிந்து சமய ஆகம விதிகளுக்கு முரணாக,கோவில் கதவில் உள்ள தலைவர்களின் படங்களை அகற்ற வேண்டும் என்று மனு அளித்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ முருகேசன் அவர்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டரிடம் தெரிவித்து உரிய தீர்வை ஏற்படுத்துவோம் என்று கூறினார்.


Share it if you like it