ஹிந்து துறவிகளுக்கு நடந்த கொடூரங்கள் – சுவாமி லக்ஷ்மனானந்தா சரஸ்வதிக்கு நடந்தது என்ன ?

ஹிந்து துறவிகளுக்கு நடந்த கொடூரங்கள் – சுவாமி லக்ஷ்மனானந்தா சரஸ்வதிக்கு நடந்தது என்ன ?

Share it if you like it

  • 2008 ஆம் ஆண்டு ஒடிசாவில் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் வனவாசி பகுதிகளில் 46 வயதான சுவாமி லக்ஷ்மானானந்தா
    சரஸ்வதி என்கிற ஹிந்து பெண் துறவி, கன்யா என்னும் ஆசிரமத்தை நடத்தி வந்துள்ளார். தனது ஆசிரமத்தில் இருந்து வனவாசி மக்களுக்கு கல்வி போதிப்பது, உதவி செய்வது போன்ற செயல்களை மிகவும் அன்போடு செய்து கொண்டு வந்திருந்தார். இதனால் அங்குள்ள மக்களுக்கு அந்த துறவியின் மீது அன்பும், மரியாதையும் ஏற்பட்டது. இது அங்குள்ள கம்யூனிசவாதிகளுக்கு மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியது.
  • அந்த பெண் துறவி பிராமணிகோவன் கிராமத்தைப் பார்வையிட சென்றபோது பண்ணா கிறிஸ்துவ தலைவரும் மற்றும் பிஜேடி நாடாளுமன்ற உறுப்பினரான சக்ரிபா சிங் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அந்த துறவியின் ஓட்டுநரையும், பாதுகாவலரையும் தாக்கியுள்ளனர்.
  • இந்த சம்பவத்தில் மாநிலங்களவையில் இந்திய தேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதா காந்த நாயக்கும் சம்மந்தப்பட்டுள்ளதாக அந்த துறவி தெரிவித்துள்ளார். மேலும் ராதா காந்த நாயக், கிறிஸ்தவ-சுவிசேஷ அமைப்பான வேர்ல்ட் விஷனின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
  • காந்தமால் மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமான புல்பானியில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ள தனது கன்யா ஆசிரமத்தில் 130 பெண்கள் உட்பட பல வனவாசி மக்களுடன் கிருஷ்ண ஜெயந்தி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடியிருந்தனர். அப்போது திடிரென்று முப்பது முதல் நாற்பது ஆயுதம் ஏந்திய கம்யூனிச குழு ஒன்று ஆசிரம அரசு காவலர்களை கொடூரமாக தாக்கினர். பின் ஆசிரமத்தை சூழ்ந்து ஏ.கே.47 மற்றும் கைத்துப்பாக்கிகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தி அந்த பெண் துறவியை கொடூரமாக கொலை செய்துள்ளனர். மேலும் அந்த பெண் துறவியுடன் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த கொலையை நேரில் கண்ட சாட்சிகளாக பல வனவாசி மக்கள் இருந்தனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

எதற்காக அந்த பெண் துறவி சுட்டு கொல்லப்பட்டார் ?

  • வனவாசி மக்களுக்கு கல்வி போதித்ததற்காகவா ?
  • ஹிந்து மதத்தை சார்ந்த துறவி என்பதற்காகவா ?
  • ஹிந்து விழாவை வனவாசி மக்களுடன் கொண்டாடியதற்காகவா ?
  • வனவாசி மக்களுக்கு உதவி செய்ததற்காகவா ?

Share it if you like it