13 ஆண்டுகள் என்ன செய்தது திமுக – எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு!

13 ஆண்டுகள் என்ன செய்தது திமுக – எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு!

Share it if you like it

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் வெற்றிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , 13 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் திமுக இருந்துள்ளது. தமிழக மக்களுக்காக என்ன செய்தது? ஆனால் அதிமுக அரசு அப்படி இல்லை. உள்ளாட்சி துறையில் சிறப்பாக பணியாற்றி 104 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

அதிமுகவில் அனைத்து தொண்டராலும் முதலமைச்சராக முடியும். ஆனால் திமுகவில் அது சாத்தியமா? அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது.நான் இல்லையெனில் அதிமுகவில் வேறு யாராவது முதலமைச்சர் ஆகியிருப்பார்கள். ஆனால் ஸ்டாலின் கனவு மட்டும் ஒருபோதும் பலிக்காது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா தலைவாசல் பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,886 ஏக்கரில் அமையவுள்ளது. இதற்கு வரும் பிப்ரவரி 7ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளோம் என்று கூறினார்.


Share it if you like it