14 வயது சிறுமி திருமணம், பலாத்காரம்: காலித் ஹாசன், தபரூக் ஹுசைன் கைது!

14 வயது சிறுமி திருமணம், பலாத்காரம்: காலித் ஹாசன், தபரூக் ஹுசைன் கைது!

Share it if you like it

14 வயது சிறுமியை 2-வது திருமணம் செய்த காலித் ஹாசனையும், அச்சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அவரது நண்பர் தபரூக் ஹுசைனையும் போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் காலித் ஹாசன். 25 வயதாகும் இவர், தனது மனைவியுடன் சென்னை குரோம்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்ற ஒரு புகாரை அளித்திருக்கிறார். அப்புகார் புரியாத மொழியில் இருந்ததாலும், மேற்படி இளம்ஜோடிகள் புரியாத மொழியில் பேசியதாலும் போலீஸார் கடும் குழப்பமடைந்தனர். எனினும், மேற்படி ஜோடிகள் பேசியதிலிருந்து ஏதோ பாலியல் சம்பந்தப்பட்ட புகார் என்பதை புரிந்து கொண்ட போலீஸார், இருவரையும் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வந்தனர். அங்கும் மொழிப் பிரச்னை ஏற்படவே, மொழி பெயர்பாளரை வரவழைத்து விசாரணையை தொடங்கினார்கள். அப்போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த காலித் ஹாசன், தனது மனைவி என்று கூறிய பெண்ணுக்கு வெறும் 14 வயதுதான். அச்சிறுமி பள்ளிக்குச் செல்லும்போது, ஆசைவார்த்தை கூறி மயக்கி காதலித்த காலித் ஹாசன், கடந்த ஏப்ரல் மாதம் திருமணமும் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அங்குதான் சிக்கலே ஆரம்பித்தது. காரணம், காலித் ஹாசனுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. ஆகவே, எங்கு சென்று வாழ்க்கையைத் தொடங்குவது என்று நினைத்திருக்கிறார். அப்போது, மேற்குவங்கத்தைச் சேர்ந்த தனது நண்பர் தபரூக் ஹுசைன் (28), சென்னையில் இருப்பது நினைவுக்கு வந்தது. ஆகவே, தபரூக் ஹுசைனை செல்போனில் தொடர்புகொண்டு தனது மனைவியுடன் சென்னைக்கு வேலை தேடி வருவதாகக் கூறியிருக்கிறார்.

தபரூக் ஹுசைனும் ஓகே சொல்லவே, உடனே புறப்பட்டு நேராக சென்னைக்கு வந்து இறங்கி இருக்கிறார்கள். பின்னர், குரோம்பேட்டை துர்கா நகரில் உள்ள தபரூக் ஹுசைன் வீட்டிக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் காலித் ஹாசன் அழைத்து வந்தது அவருடைய மனைவி அல்ல என்பது தபரூக் ஹுசைனுக்கு தெரிவந்திருக்கிறது. இதுகுறித்து அவர் கேட்டதற்கு, காதலித்து 2-வது திருமணம் செய்து விவரத்தை கூறியிருக்கிறார். பின்னர், இருவரும் தபரூக் ஹுசைன் வீட்டிலேயே தங்கி இருக்கிறார்கள். காலித் ஹாசனும், தபரூக் ஹுசைனும் கட்டட வேலைக்கு செல்ல, அந்த சிறுமி இருவருக்கும் சமையல் செய்து கொடுத்து வந்திருக்கிறார்.

இந்த சூழலில், தபரூக் ஹுடைனுக்கு அந்த சிறுமி மீது ஒரு கண் இருந்திருக்கிறது. இதற்காக ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், சந்தர்ப்பும் கிடைக்காததால், வேறொரு திட்டம் தீட்டி இருக்கிறார். அதன்படி, கடந்த 5 தினங்களுக்கு முன்பு திட்டத்தை அரங்கேறினார். அதாவது, காலையில் வழக்கம்போல கட்டட வேலைக்கு புறப்பட்ட காலித் ஹாசன், தபரூக் ஹுசைனை அழைத்திருக்கிறார். ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், லீவு சொல்லி விட்டதாகவும் கூறியிருக்கிறார். இதன் பின்னர், காலித் ஹாசன் வேலைக்குச் சென்றுவிட, அவரது மனைவி குளிக்கச் சென்றிருக்கிறார். அப்போது, நைசாக பின்னால் சென்ற தபரூக் ஹுசைன், அச்சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்திருக்கிறார்.

பின்னர், அந்த வீடியோவை அச்சிறுமியிடம் காட்டி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதேபோல தொடர்ந்து கடந்த 5 நாட்களாக மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து வந்தால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, காலித் ஹாசனிடம் விவரத்தை கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்தே, இருவரும் போலீஸில் புகார் கொடுக்க வந்த விவரம் தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, தாம்பரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தததாக தபரூக் ஹுசைனை கைது செய்ததோடு, சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக காலித் ஹாசனையும் கைது செய்தனர். மேலும், இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புழல்சிறையில் அடைத்திருக்கிறார்கள். அச்சிறுமியை காப்பகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.


Share it if you like it