144 எதிரொலி – ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய VHP!

144 எதிரொலி – ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய VHP!

Share it if you like it

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு, மாநிலம் முழுவதும் மார்ச் 31-ம் தேதி, வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதிரடி நடவடிக்கைகளை அரசு, மேற்கொண்டு வருகிறது. ஆதரவற்றோர், முதியோர், சாலைகளில் வாழும் ஏழை மக்கள், நலன் கருதி தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொண்டாலும்.

உணவு வழங்கிய பொழுது

அனைத்தையும் தமிழக அரசே, வழங்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது, கடினமான காரியம் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு, களத்தில் இறங்கி சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், பசியால் வாடும் ஏழைகளுக்கு, அன்ன தானம் வழங்கி வருகின்றனர். விசுவ ஹிந்து பரிஷத்தின் தொண்டு உள்ளத்திற்கு,  பல்வேறு சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு பொட்டலம் தயாரிக்கும் பணியில்.

Share it if you like it