38 ஆண்டுகால சேவகர், ஷாந்தியடைந்தார்..!

38 ஆண்டுகால சேவகர், ஷாந்தியடைந்தார்..!

Share it if you like it

பாரதிய கிசான் சங்கத்தின் மாநில அமைப்பாளர் திரு.கோபி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலமானார்.

வேலூரை சொந்த ஊராக கொண்ட இவர் காய்கறி வியாபாரம் செய்யக்கூடிய எளிமையான குடும்ப பின்னணி கொண்டவர் பழனியில் தனது ஆரம்ப கல்வியை முடித்த இவர் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவரை புனர்நிர்மாணம் செய்யும் பணியில் தன்னலம் கருதாது பணியாற்றியவர் கல்லூரியில் படித்துக்கொண்டே RSS இணைந்து பணியாற்றி வந்தார் பின்னர் அதே அமைப்பில் முழுநேர பணியாளராக (பிரச்சாரக்) கடலூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பணியாற்றிய பிறகு பாரதிய கிசான் சங்கம் விவசாயத்திற்கான அமைப்பின் மாநில அமைப்பாளராக பணியாற்றிவந்தார். வெளிநாட்டு விதைகள் தடை கோரி டெல்லியில் நடந்த ஊர்வலத்திற்கு, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 500 பேர் கலந்து கொள்ள செய்தவர்

நுரைஈரல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.


Share it if you like it