குஜராத்தில் 4 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது !

குஜராத்தில் 4 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது !

Share it if you like it

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 4 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் கைது செய்தனர். 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக, குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்திற்கு விரைந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, 4 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் கைது செய்தனர்.

விசாரணையில், 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள். இவர்கள் சென்னையில் இருந்து ஆமதாபாத் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் தகவலுக்காக காத்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்களின் நோக்கத்தை கண்டறிய பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் தற்போது ரகசிய இடத்தில் விசாரித்து வருகிறது. அவர்களின் நோக்கம் என்ன? என்று கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *