மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அதற்கான செயல் திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5- மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு மிகக் குறுகிய காலமே உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக செயற்குழு டெல்லியில் உள்ள பா.ஜ.க.அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தியது.மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இதில் கலந்து கொண்டனர்.