ஜன்னல், மற்றும் கதவுகளை திறந்து வைத்தால்…! கொரோனா ஓடிவிடும் மேற்கு வங்க முதல்வரின் ஞானம்…!

ஜன்னல், மற்றும் கதவுகளை திறந்து வைத்தால்…! கொரோனா ஓடிவிடும் மேற்கு வங்க முதல்வரின் ஞானம்…!

Share it if you like it

கொரோனா ஒழிப்பில் எனது அரசு சிறப்பாக செயல்படவில்லை என்று முடிவு செய்தால் மத்திய அரசே அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளட்டும் என்று முதல்வர் என்பதையும் மறந்து அர்த்தமற்ற முறையில் அண்மையில் பேசி இருந்தார் மம்தா பேனர்ஜி.

கொரோனா ஒழிப்பில் தோல்வி அடைந்த அரசிடம் இருந்து எங்களை மத்திய அரசு பாதுகாக்க முன்வர வேண்டும் என்று அம்மாநில மக்களே கதறும் நிலையை அனைத்து ஊடகங்களும் வெளிச்சம் போட்டு காட்டின.

கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைத்தால் தொற்று நோய் கிருமிகள் வீட்டை விட்டு வெளியேறி விடும். நான் காரில் பயணம் செய்யும் போதெல்லாம், ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறேன் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் தனது ஞானத்தை பகிர்ந்துள்ளார்.

மத்திய அரசு கூறும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை, கடைப்பிடிக்காமல் இன்று வரை தனது ஆணவ போக்கையே கடைப்பிடித்து வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு இறந்த உடல்களை மக்கள் குடியிருப்பில் மேற்கு வங்க சுகாதார ஊழியர்கள் வீசி செல்ல முயன்ற காணொலி.

மனித உடல்களை சுகாதார ஊழியர்கள் கயிற்றை கட்டி இழுத்து செல்லும் மற்றொரு அவலம்.


Share it if you like it