மக்களின் உயிரை விட அரசின் வருமானம் முக்கியமா? – பிரபல திரைப்பட இயக்குனர் காட்டம்..!

மக்களின் உயிரை விட அரசின் வருமானம் முக்கியமா? – பிரபல திரைப்பட இயக்குனர் காட்டம்..!

Share it if you like it

தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், உயிருக்கும், முக்கியத்துவம் கொடுக்காமல். மதுக்கடைகளை திறந்த விடியல் அரசிற்கு பலர் கடும் கட்டணங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் தனது வேதனையை டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்து உள்ளார். 

முதலமைச்சர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டன. பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள மாற்று வழிகளை கையாண்டு மதுக்கடைகளை நிரந்தரமாக மூடிவிட்டால் முதலமைச்சர் அவர்களின் அரசியல் வாழ்வில் இதுவே மணிமகுடமாகத்திகழும் அவரை மக்கள் என்றென்றும் போற்றுவார்கள்.

மூடப்பட்ட மதுக்கடைகளை அரசாங்கம் எதற்காக திறந்திருக்கிறது என்பதற்கான காரணம் எல்லோருமே அறிந்ததுதான்! மக்களின் உயிரை விட, வாழ்வாதாரத்தை விட, குடும்ப நலனை விட அரசாங்கத்தின் வருமானம் மட்டுமே முக்கியமானது எனும் நிலைக்கு தமிழ்நாட்டை திராவிட கட்சிகள் உருவாக்கி வைத்து விட்டன.


Share it if you like it