அருணாச்சலப் பிரதேசத்தில் மலர்ந்தது தாமரை !

அருணாச்சலப் பிரதேசத்தில் மலர்ந்தது தாமரை !

Share it if you like it

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்தது. மீதமிருந்த 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். அப்படி போட்டியின்றி வென்ற வேட்பாளர்கள் முதல்வர் பெமாகண்டுவும், துணை முதல்வர் சௌஹ்னா மெயின் ஆகியோரும் அடக்கம்.

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அருதிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியமைக்கிறது. சிக்கிம்மில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி இமாலய வெற்றியை பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் அருணாச்சல மக்களுக்கு நன்றி கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :- நன்றி, அருணாச்சல பிரதேசம்! இந்த அற்புதமான மாநிலத்தின் மக்கள் வளர்ச்சி அரசியலுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர். தங்களின் நம்பிக்கையை மீட்டெடுத்ததற்காக அவர்களுக்கு என் நன்றிகள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *