வன்முறையை தூண்டும் அதிர்ச்சி சம்பவம் : வேடிக்கை பார்க்கும் காவல்துறை !

வன்முறையை தூண்டும் அதிர்ச்சி சம்பவம் : வேடிக்கை பார்க்கும் காவல்துறை !

Share it if you like it

நட்ட நடுரோட்டில் இண்டி கூட்டணி ஆதர்வாளர்கள் சிலர் ஆட்டின் கழுத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை மாட்டி பின்னர் வீச்சருவாளால் ஆட்டின் தலையை ஆக்ரோஷமாக வெட்டி அதனை ரோட்டிலே மேலும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விலங்குகளை நடுரோட்டில் வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். புளூ கிராஸ் விலங்குகள் நல அமைப்பு இதற்கு நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயண திருப்பதி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

நடு ரோட்டில் ஒரு ஆட்டை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ள இந்த ச‌ம்பவ‌ம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை அவர்கள் மீது த‌மிழக அரசியல் கட்சிகள் கொண்டுள்ள கொலை வெறியை இது வெளிப்படுத்துகிறது. ஊழலை, லஞ்சத்தை, முறைகேடுகளை தட்டிக் கேட்டால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதை சொல்லாமல் உணர்த்துகிறார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
உள்ளிட்ட திமுக வினர் ஒரு ஆட்டை பிடித்து கொண்டிருந்த காட்சி திமுக வினர் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து அரசியல் செய்கிறார்கள் என்பதை தெளிவாக்குகிறது. சிறுவர்களை தூண்டி விட்டு அவர்களின் மனங்களில் வன்முறையை, வன்மத்தை புகுத்தியது கொடும் குற்றம்.

அண்ணாமலை மீது உ‌ள்ள பயம், தமிழகத்தில் திமுக வின‌ர் அரங்கேற்ற துடிக்கு‌ம் வெறியாட்டத்தை உணர்த்துகிறது.

தமிழ்நாடு காவல்துறை ம‌ற்று‌ம் தமிழக முதல்வர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட வேண்டும். அண்ணாமலை அவர்களின் பாதுகாப்புக்கு தமிழக காவல்துறை முழு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

https://twitter.com/narayanantbjp/status/1798577607518326861


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *