கூட்டணியினால் படுதோல்வி : சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி !

கூட்டணியினால் படுதோல்வி : சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி !

Share it if you like it

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இண்டி கூட்டணியுடன் கூட்டணி வைத்து டில்லியில் படுதோல்வி அடைந்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி பதவி காலம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைய உள்ளது.

இதையடுத்து வரப்போகும் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட உள்ளதாகவும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *