மோடி பதவி ஏற்பு விழா : லோகோ பைலட் ஐஸ்வர்யா மேனனுக்கு அழைப்பு !

மோடி பதவி ஏற்பு விழா : லோகோ பைலட் ஐஸ்வர்யா மேனனுக்கு அழைப்பு !

Share it if you like it

இந்திய நாடாளுமன்றத்தின் 18வது பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மோடி தலைமையில் புதிய அமைச்சரவை வருகின்ற நாளை (ஜூன் 9) (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்க உள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள, சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா இதுவரை இரண்டு லட்சம் மணி நேரங்கள் வந்தே பாரத், ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இயக்கி உள்ளார். ரயில்வே சமிக்ஞைகளை (சிக்னல்) உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் பாராட்டப்பட்டுள்ளது. சென்னை – விஜயவாடா, சென்னை – கோயம்புத்தூர் பிரிவில் துவக்க நாள் முதலே ஐஸ்வர்யா மேனன் வந்தே பாரத் ரயில்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதிய பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு ஐஸ்வர்யா மேனன் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளது தெற்கு ரயில்வேக்கு கிடைத்த பெருமிதம் என்று அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *