போன வாரம் BSP தலைவர் கொலை : இந்த வாரம் NTK நிர்வாகி கொலை : இதுதான் திராவிட ஆட்சியா ஸ்டாலின் ?

போன வாரம் BSP தலைவர் கொலை : இந்த வாரம் NTK நிர்வாகி கொலை : இதுதான் திராவிட ஆட்சியா ஸ்டாலின் ?

Share it if you like it

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியில் மதுரை மாவட்ட வடக்கு தொகுதி துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் இவர் வழக்கம் போல் இன்று அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாலசுப்பிரமணியம் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் தியாகராஜனின் வீட்டருகே கொலை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே மாதத்தில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து திமுக அரசை விமர்சித்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றம் சாட்டினார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *