இந்துக்களை முகத்திலே குத்த வேண்டும் என்று கூறிய பாதிரியார் எஸ்றா சற்குணம் பிறந்தநாளை கொண்டாடிய திருமா – கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ் !

இந்துக்களை முகத்திலே குத்த வேண்டும் என்று கூறிய பாதிரியார் எஸ்றா சற்குணம் பிறந்தநாளை கொண்டாடிய திருமா – கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ் !

Share it if you like it

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் சீர்குலைக்கும் வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டவர்.

கடந்த சில மாதஙக்ளுக்கு முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம், சென்னையின் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்தது. அதில், பேராயர் எஸ்றா சற்குணம், “நாம் பேசக்கூடிய குரலானது, டில்லியில் எதிரொலிக்க வேண்டும். மோடியின் காதுல போய் விழ வேண்டும். நான்கு பணக்காரர்களை ஆதரிக்க வேண்டும் என்பது தான், அவரது கடமை. ஏழைகளை பற்றி கவலையே இல்லை. அவருக்கு, கொஞ்சமாவது கடவுள் பயம் இருந்திருந்தால், மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டார். அந்த ஆள் கடவுளை பற்றி பேசுகிறாரே தவிர, கடவுள் பயம் கிடையாது; மனித பயமும் கிடையாது. இந்த நாட்டை ஆளுகிற தகுதி, அவருக்கு என்ன இருக்கிறது; இந்த நாட்டில் இருந்து, அவர் அகற்றப்படுகிற வரை, கஷ்டம் இருந்து கொண்டு தான் இருக்கும். அவருக்கு கஷ்டம், நஷ்டம் என, எதுவும் தெரியவில்லை”. இவ்வாறு பேசினார். பிரதமர் மோடி மீதான எஸ்றா சற்குணத்தின் அவதூறு பேச்சு, தமிழக பா.ஜ.க வில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசினார். அதில் ‘இந்து மதமே இல்லை, இந்துக்களை முகத்தில் குத்தி காயப்படுத்த வேண்டும்’ என்று மிகவும் ஆக்ரோஷமாக ஹிந்துக்களை பற்றி பேசினார். இந்த சம்பவமும் தமிழகத்தில் பெரும் பிரளயத்தை கிளப்பியது. மேலும் மனிதர்களை பிடிப்பதுதான் எங்கள் வேலை, மதம் மாற்றுவதுதான் எங்கள் வேலை என்று எஸ்றா சற்குணம் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இவ்வாறு ஹிந்து மதத்திற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும்,தேசத்திற்கு எதிராவும் கருத்து தெரிவித்து வரும் கிறிஸ்தவ பேராயர் எஸ்றா சற்குணம் பிறந்த நாளை கொண்டாட விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மேயர் பிரியா ஆகியோர் சென்றுள்ளனர்.

பிறந்தநாள் விழாவிற்கு சென்றது மட்டுமல்லாமல் கேக்கை வெட்டிய திருமாவளவன் சற்குணத்திற்கு ஊட்ட அந்த கேக்குக்கே பிடிக்காமல் தவறி கீழே சிந்தி விடுகிறது. இதில் தந்தை பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்களின் பிறந்தநாளில் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினோம் என்று பதிவிட்டுள்ளார் திருமா. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் திருமாவளவனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

https://fb.watch/tq1dyh9Ez0


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *