எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தன்னுடைய குலதெய்வத்தை மறக்காத நடிகர் தனுஷ் !

எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தன்னுடைய குலதெய்வத்தை மறக்காத நடிகர் தனுஷ் !

Share it if you like it

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது தனது 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதில், தனுஷ், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூலை 26ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தனுஷ் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம், முத்துரங்காபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலான ஸ்ரீ கஸ்தூரியம்மாள் ஸ்ரீ மங்கம்மாள் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயிலில் அம்பாள் மற்றும் சுவாமிக்கு மலர் மாலை அணிவித்து, பூஜைகள் நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

இதுதொடர்பாக நடிகர் தனுஷ் எக்ஸ் பதிவில், இங்கு பரந்து கிடக்கும் பூமி, உனக்கும் தந்ததைய்யா,
இங்கு இருக்கும் அத்தனை சாமியும், உனக்கும் சொந்தமைய்யா…
Staying connected to your roots is peace (உங்கள் வேர்களுடன் இணைந்திருப்பது அமைதி) என்று பதிவிட்டுள்ளார்.

சாதாரண நிலையிலிருந்து கொஞ்சம் முன்னேறி நல்ல நிலைமைக்கு வந்துவிட்டால் மதம் மாறுபவர்கள் மத்தியில் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் தன்னுடைய மதத்தையும் குல தெய்வத்தையும் விட்டுக்கொடுக்காமல் இருப்பது மக்களிடையே பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *