மகன் எட்டடி பாய்ந்தால் தந்தை பதினாறு அடி பாய்கிறார் : கதிர் ஆனந்தை மிஞ்சிய துரைமுருகன் !

மகன் எட்டடி பாய்ந்தால் தந்தை பதினாறு அடி பாய்கிறார் : கதிர் ஆனந்தை மிஞ்சிய துரைமுருகன் !

Share it if you like it

வேலூரில் திமுக கட்சி சார்பில் புதிய கட்டடம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முட, நான் படிக்கும்போது எங்கள் வகுப்பில் ஒரே ஒரு பெண்தான் இருத்ததாக கூறினார். இதற்கு அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் பொன்முடிய கலாய்க்கும் விதமாக, பொன்முடி கல்லூரி படிக்கும்போது அவருடைய வகுப்பில் ஒரே ஒரு பெண் தான் இருந்தார், ஆனால் நான் பி.ஏ படிக்கும்போது எங்கள் வகுப்பில் 32 பெண்கள் இருந்தனர், மேலும் நான் எம்.ஏ படிக்கும்போது எங்கள் வகுப்பில் 19 பெண்கள் இருந்தனர், ஆண்கள் வெறும் 5 பேர் தான், அதற்கெல்லாம் ஒரு ராசி வேணும் என்று பேசியுள்ளார். சமூக வலைத்தளத்தில் திமுக அமைச்சர் பொன்முடியை அமைச்சர் துறைமுருகன் கிண்டல் செய்யும் காணொளி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

திமுகவின் இரண்டு அமைச்சர்கள் திமுக நிகழ்ச்சியில் பலபேர் மத்தியில் எவ்வளவு அருமையாக பேசுகிறார்கள் பார்த்தீர்களா ? தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க அதையெல்லாம் விட்டுவிட்டு 86 வயதில் பேசுகிற பேச்சா இது ? இதுபோல் அமைச்சர்கள் இருந்தால் எப்படி தமிழ்நாடு முன்னேறும். இந்த லட்சணத்தில் காவிரி விவகாரம் குறித்து ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்க டெல்லி செல்கிறாராம் துரைமுருகன். அவரிடமாவது காவிரி விவகாரம் குறித்து பேசுங்கள், கல்லூரி பெண்களை குறித்து பேசாதீர்கள்.

சமீபத்தில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் பிரச்சார கூட்டத்தின் போது, பெண்களை பார்த்து “எல்லாரும் பாக்க பழபழப்பா இருக்கீங்க, பவுடர் கிரீம் எல்லாம் போட்டுருக்கீங்களா, ஆயிரம் ரூவா வந்துருச்சா” என்று மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பெண்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *