நாங்குநேரியில் தொடரும் அவலம் ! புத்தியை தீட்டும் வயதில் கத்தியை தீட்டும் பள்ளி மாணவர்கள் !

நாங்குநேரியில் தொடரும் அவலம் ! புத்தியை தீட்டும் வயதில் கத்தியை தீட்டும் பள்ளி மாணவர்கள் !

Share it if you like it

நாங்குநேரி அருகே விஜயநாராயணம் பகுதியில் கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி மாணவரை சக மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் கேந்திரிய வித்தியாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும், இரு மாணவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மாணவர் ஒருவர் தெரியாமல் சக மாணவன் இடத்தில் தண்ணீரை சிந்தியதால் ஆத்திரமடைந்த சக மாணவன் அந்த மாணவனுடன் வாக்குவாதம் செய்து சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆத்திரம் தீராத மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து சிறிய அரிவாளை கொண்டு வந்து தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவனை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவரை ஆசிரியர்கள், மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தற்போது இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள விஜயநாராயணம் போலீசார், பின்னணி என்ன? வேறு எதுவும் காரணமா என பலகோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, நாங்குநேரியில் ஜாதி காரணமாக 12ஆம் வகுப்பு படித்த மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே புரட்டி போட்டது. தற்போது, இதுபோன்று மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *