திருச்சியில் நடைப்பெற்ற இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில கலந்துரையாடல் கூட்டம் !

திருச்சியில் நடைப்பெற்ற இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில கலந்துரையாடல் கூட்டம் !

Share it if you like it

திருச்சி மாவட்டத்தில் உள்ள சீராதோப்பு பாரதியார் குருகுலத்தில், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில கலந்துரையாடல் கூட்டம் இன்று தொடங்கியது.

இதில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் முத்துக்குமார், இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில தலைவர், வழக்கறிஞர் விஜயராகவன், மாநில பொதுச் செயலாளர் கார்த்திக் வெங்கடாஜலபதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட, இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆறுமுகக்கவுண்டனுர் மணிகாரர் பகுதியில் அமைந்துள்ள, விநாயகர் கோவிலில் மஞ்சள் நீர் அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. 72பேர் கலசங்களுடன் கலந்து கொண்டனர். இதேபோல் பழனி நகரிலும் ஆடி மாத அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் நாளை (ஆகஸ்ட் 11 – ஞாயிற்றுக்கிழமை ) இந்துமுன்னணி தமிழகமெங்கும் உள்ள கோவில்களில் உழவாரப்பணி செய்யப்போவதாகவும் பொதுமக்களும் தங்கள் பகுதியில் ஏதாவது ஒரு கோவிலை சுத்தம் செய்து இறைவனருள் பெறுமாறும் கூறியுள்ளது குறிப்பிடத்தகத்த்து.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *