பள்ளி மாணவனை கத்தியால் குத்திய திமுக நிர்வாகி : நெஞ்சை உலுக்கும் கொடூரம் !

பள்ளி மாணவனை கத்தியால் குத்திய திமுக நிர்வாகி : நெஞ்சை உலுக்கும் கொடூரம் !

Share it if you like it

விழுப்புரம் மாவட்டத்தில் சாலை சரியில்லை என்று கூறிய காரணத்திற்காக திமுக நிர்வாகி ஒருவர் பள்ளி மாணவனை கத்தியால் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பூத்தேரி பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவரின் மகன் சந்தோஷ்குமார் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் இருசக்கர வாகனத்தில் திண்டிவனத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த நிலையில் ரயில்வே பாலம் அருகே சென்ற போது வேகத்தடையில் இரு சக்கர வாகனத்தை ஏற்றும்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் சாலை சரியாக போடாததால் தான் கீழே விழுந்ததாக கூறி சாலை போட்ட அதிகாரிகளையும், தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் திமுக அரசையும் கோவமாக திட்டி பேசினார். இதனை பார்த்த கறிக்கடை உரிமையாளரும், திமுக நிர்வாகியுமான அபி என்பவர் தான் கடையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷ்குமாரை சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.மேலும் அபியுடன் சேர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் 5 நபர்களும் சந்தோஷ்குமாரை தாக்கியுள்ளனர். இதனை பார்த்து தடுக்க ஓடிவந்த புஷ்பராஜ் என்பவரையும் இந்த கும்பல் சரமாரி தாக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் சதிஷ்குமாரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவர் என்றும் பாராமல் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற திமுக நிர்வாகி மற்றும் அவருடைய ஆதாராளர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் திமுக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *