இந்து அன்னையர் முன்னணி சார்பில் நடைப்பெற்ற 108 திருவிளக்கு பூஜை !

இந்து அன்னையர் முன்னணி சார்பில் நடைப்பெற்ற 108 திருவிளக்கு பூஜை !

Share it if you like it

இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் நமது கலாச்சாரத்தினை பாதுகாக்கும் வகையில் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த மங்கள நிகழ்ச்சிகளை பல பகுதிகளில் மக்களிடையே தொடர்ந்து நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், விளங்காடு பக்கம் பஞ்சாயத்து, கண்ணம்பாளையம் கெங்கையம்மன் கோவிலில், இந்து அன்னையர் முன்னணி சார்பில் மஞ்சள் நீர் அபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. அதில் பல பெண்கள் கலந்துக்கொண்டனர்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தெற்கு ஒன்றியம், சின்ன வெண்மணி கிளை கமிட்டி சார்பாக, கிராம தேவதை ஸ்ரீஎட்டியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைப் பெற்றது. கிராம பொது மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. வேளாங்கண்ணி பிரகாஷ் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அவுரிமேடு கிளை கமிட்டியில், ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியம், கண்டமத்தான் பகுதியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் மஞ்சள் நீர் அபிஷேகம் மற்றும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *