சட்டவிரோதமாக ஜெபக்கூட்டம் : தடுத்து நிறுத்தி காவல்துறையிடம் புகார் அளித்த இந்து முன்னணி !

சட்டவிரோதமாக ஜெபக்கூட்டம் : தடுத்து நிறுத்தி காவல்துறையிடம் புகார் அளித்த இந்து முன்னணி !

Share it if you like it

கடலூர் மாவட்டம் – புர்கீஸ் பேட்டை அருகே உள்ள சக்திவேல் நகரில், சட்டவிரோதமாக ஜெபக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து ஊர் மக்கள் தகவலின் பேரில், இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் உடனடியாக களத்திற்கு சென்று ஊர் மக்கள் உதவியுடன் சட்டவிரோதமாக நடைபெறும் ஜெபக்கூட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும் காவல்துறையிடம் புகார் அளித்ததின் பெயரில் மேற்கொண்டு இந்த இடத்தில் ஜெபக்கூட்டம் நடைபெறாது என்று உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கோவையில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட, சசிகுமார் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவஞ்சலி பொதுக்கூட்டம், மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் தலைமையில், மாவட்ட தலைவர் தசரதன் அவர்கள் முன்னிலையில் கோவை மாநகரில் உள்ள சுங்கம் பகுதியில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர், J.S. கிஷோர் குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், கோவை கோட்ட செயலாளர் பாபா கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் உட்பட 1000-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *