சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் : 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் போக்சோவில் கைது !

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் : 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் போக்சோவில் கைது !

Share it if you like it

சென்னையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சென்னை அருகே உள்ள ஒரு பகுதியில் செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று இரவு நேரத்தில், பள்ளி மாணவி ஒருவர் தன் வீட்டின் அருகே உள்ள காட்டுபகுதியில் இயற்கை உபாதைக்காக சென்ற போது இரண்டு சிறார்கள் மற்றும் சுந்தர் என்ற இளைஞர் இணைந்து, அச்சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

உடனடியாக இச்சம்பவம் குறித்து பெற்றோர் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் தலைமறைவாக இருந்த சுந்தர் மற்றும் இரண்டு சிறார்களை போலீசார் கைது செய்து விசாரித்ததனர். அப்போது, தங்கள் வீட்டின் அருகே இருந்த அந்தச் சிறுமியிடம் ஏற்கெனவே அந்த சிறார்கள் நட்பாக பழகி வந்தது தெரியவந்தது.

அந்த நட்பை தவறாக பயன்படுத்திக் கொண்டு மூவரும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதையடுத்து, போலீசார் குற்றவாளிகளை அருகிலிருந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறார்களை கூர்நோக்கு இல்லத்திலும் ஒருவரை சிறையிலும் காவல்துறையினர் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *