கேரளாவில் கம்யூனிசத்தை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், ஆட்சி நடந்து வருகிறது. திருச்சூர் மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு அதிகாரியாக உள்ள கே.ஏ. பிந்து, அலுவலகத்தில் கிறிஸ்துவ ஜெபக்கூட்டம் நடத்தியுள்ளதாக புகார் வந்துள்ளது. இதையடுத்து, சப் – கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. சப் — கலெக்டர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பிந்துவை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இது குறித்து அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறியதாவது: கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்த பிரார்த்தனை கூட்டம் நடந்துள்ளதாகவும், அலுவலகத்தில் உள்ள தீய சக்தியை வெளியேற்றும் வகையிலும் கிறிஸ்துவ மத தலைவர் ஒருவரின் அறிவுரையின்படி, இந்த பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.