அரசு அலுவலகத்தில் கிறிஸ்துவ ஜெப கூட்டமா ? கலெக்டர் அதிரடி உத்தரவு !

அரசு அலுவலகத்தில் கிறிஸ்துவ ஜெப கூட்டமா ? கலெக்டர் அதிரடி உத்தரவு !

Share it if you like it

கேரளாவில் கம்யூனிசத்தை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், ஆட்சி நடந்து வருகிறது. திருச்சூர் மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு அதிகாரியாக உள்ள கே.ஏ. பிந்து, அலுவலகத்தில் கிறிஸ்துவ ஜெபக்கூட்டம் நடத்தியுள்ளதாக புகார் வந்துள்ளது. இதையடுத்து, சப் – கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. சப் — கலெக்டர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பிந்துவை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இது குறித்து அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறியதாவது: கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்த பிரார்த்தனை கூட்டம் நடந்துள்ளதாகவும், அலுவலகத்தில் உள்ள தீய சக்தியை வெளியேற்றும் வகையிலும் கிறிஸ்துவ மத தலைவர் ஒருவரின் அறிவுரையின்படி, இந்த பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it