தி.மு.க அரசு நீட் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவிற்கு அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதனை தொடர்ந்து நீட் தொடர்பான அறிக்கையை நீதிபதி தமிழக அரசிடம் சமீபத்தில் வழங்கி இருந்தார். இந்த அறிக்கையில் பல குளறுபடிகள் உள்ளதாக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தங்களின் கடும் எதிர்ப்பினை இன்று வரை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து இன்று வரை நடிகர் சூர்யாவோ, அவரது தம்பி கார்த்தியோ, வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காப்பது ஏன்? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.