பட்டப்பகலில் கஞ்சா போதையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல் : தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா ?

பட்டப்பகலில் கஞ்சா போதையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல் : தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா ?

Share it if you like it

சேலம், வீராணம் காவல் நிலையத்திற்குட்பட்ட மன்னார்பாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த திங்கள்கிழமை (15.07.2024) கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணை பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்னைக் காலை வாரிவிட்டு கீழே தள்ளி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்தப் பெண் கத்தியதில் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே பொதுமக்களை பார்த்தவுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த நபர் வேகவேகமாக ஓடிவிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வீராணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வீராணம் காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்துக்கொண்டு அந்த வாலிபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இச்செயலில் ஈடுபட்டது மன்னார்பாளையம் அடுத்த அள்ளிகுட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கண்ணனை கைது செய்த வீராணம் காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கண்ணன் இது போன்று வீட்டு அருகே உள்ள மூதாட்டிகளிடமும், சிறுமிகளிடமும் தவறாக நடந்து கொண்டதும் தெரிய வந்தது. அவருக்கு கஞ்சா மற்றும் மதுப்பழக்கம் அதிகரித்து, அதன் காரணமாக தற்போது இது போன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

பட்டப்பகலில் பெண் ஒருவரிடம் சாலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கஞ்சா மற்றும் மதுப்பழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் பட்டப்பகலில் பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்யும் நிலைக்கு கொண்டு வந்து தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது திமுக அரசு. உடனடியாக டாஸ்மாக்கை மூடி திமுக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *