மாணவர்களிடையே தேசபக்தியை வளர்க்க அழைக்கிறது ABVP !

மாணவர்களிடையே தேசபக்தியை வளர்க்க அழைக்கிறது ABVP !

Share it if you like it

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், போராசிரியர்கள், உறுப்பினராக இணைய ABVP அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக ABVP தென் தமிழக மாநில இணை செயலாளர் ஸ்ரீ. விஜயராகவன் அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்(ABVP) தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் மாணவர்களிடையே அறிவு, ஒழுக்கம் ஒற்றுமை வளர பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது. 50 இலட்சம் உறுப்பினர்களை கொண்ட உலகின் மிக பெரிய மாணவர் அமைப்பு ABVP ஆகும்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் நமது பாரத தேசத்தின் வளர்ச்சிக்காகவும் தலைசிறந்த மாணவத்தலைவர்களை உருவாக்கும் பணியினை 1949 முதல் ABVP செய்து வருகிறது.

மாணவர்களிடையே கல்வி வளர்ச்சி, ஆளுமைத்திறன், தலைமை பண்பு, தேசபக்தி வளர்க்கும் பயிற்சி பட்டறை ABVP ஆகும்.

ஆண்டுதோறும் கல்வி ஆண்டு துவக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டும் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மண்டல அளவில் உறுப்பினர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பிற்கு மேல் படிக்க கூடிய பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், போராசிரியர்கள், உறுப்பினராக இணைய ABVP அன்போடு அழைக்கிறது.

நாடு முழுவதும் 1 கோடி மாணவர்களையும் ஆசிரியர்களையும் தமிழகத்தில் 1 லட்சம் மாணவர்களையும் உறுப்பினராக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மதுரை மண்டலத்தில் மாவட்ட வாரியாக ABVP-யில் இணைவதற்கான தொடர் எண்கள் வெளியிடப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் ABVP-யில் தங்களை இணைத்து கொண்டு தாங்களும் வளர்ச்சி அடைந்து பாரத தேசத்தின் வளர்ச்சிக்கும் தங்களது பங்களிப்பை நல்குமாறு ABVP அன்போடு கேட்டு கொள்கிறது.

மேலும் மதுரை மண்டலத்தில் ABVP-யில் இணைவதற்கான அலைபேசி எண்கள் மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் தொடர் எண்

  1. மதுரை மாவட்டம் – 6385692314
  2. திண்டுக்கல் மாவட்டம் – 8610933722
  3. தேனி மாவட்டம் – 8300312833
  4. விருதுநகர் மாவட்டம் – 6379535771


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *