திமுக அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கு : அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் !

திமுக அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கு : அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் !

Share it if you like it

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ரூ.44 லட்சத்து 59 ஆயிரத்து 67 மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேபோல் கடந்த 2006 – 2011 வரையான திமுக ஆட்சிக் காலத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுக ஆட்சியில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கில், கடந்த 2022ஆம் ஆண்டு தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம், இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, இதனை மறு ஆய்வு செய்யும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், செப்.9-ஆம் தேதி முதல் தினமும் விசாரணை என்ற அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்திக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பானது திமுகவினரை கதிகலங்க செய்துள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *