நடிகர் சூர்யாவிற்கு எதிராக முதனை கிராம மக்கள் ஆர்ப்பட்டம்.
பிரபல திரைப்பட நடிகர் சூர்யா அண்மையில் நடித்து திரைக்கு வந்த படம் ’ஜெய் பீம்’, உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூறப்பட்டாலும், அதில் இடம் பெற்று உள்ள காட்சிகள் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தும் விதமாகவும், சமுதாயத்தில் மிகப்பெரிய பதற்றத்தை இத்திரைப்படம் ஏற்படுத்தி விட்டது, என பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில். முதனை கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ’ஜெய் பீம் ‘ திரைப்படத்திற்கு அவ்வூரை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.