அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு: உச்ச நீதிமன்ற நிபுணர்கள் குழு அறிக்கை தாக்கல்!

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு: உச்ச நீதிமன்ற நிபுணர்கள் குழு அறிக்கை தாக்கல்!

Share it if you like it

அதானி குழுமம் எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என சிறப்பு நிபுணர் குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன், உண்மை தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி நிபுணர்கள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து இருந்தது. அதன்படி, அக்குழு தனது விசாரணையை மேற்கொண்டு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது ; முதல் கட்டமாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதானி குழுமம் அதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதற்கான எந்தவிதமான முகாந்திரமும் கண்டறியப்படவில்லை என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. மேலும், சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் தரப்பில் எந்த ஒழுங்குமுறை தோல்வி ஏற்பட்டது என்று முடிவு செய்யவும் முடியாது.

அதானி குழுமம் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அது இடர்பாடுகளை தணிக்க எடுத்த நடவடிக்கைகள், பங்குகளின் மீதான நம்பிக்கையை வளர்க்க உதவியதாக அக்குழு தெரிவித்துள்ளது. மேலும், பங்குகளின் விலை தற்போது நிலைப்பெற்றுள்ளது என அந்த நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கிறது.


Share it if you like it