தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம் !

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம் !

Share it if you like it

அஜித் தோவலின் பணிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஜூன் 10-ஆம் தேதி முதல் மூன்றாவது முறையாக அவருக்கு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல பிரதமரின் பாதுகாப்புச் செயலர் பி.கே. மிஸ்ராவுக்கும் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டிருப்பதாக கேபினெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

1968-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஜித் தோவல், தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ விவகாரங்களைக் கையாண்டு வருகிறார்.

1972-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பி.கே. மிஸ்ரா, நிர்வாக விவகாரங்களைக் கவனித்து வருகிறார்.

இதேபோல பிரதமரின் ஆலோசகர்களாக அமித் கரே மற்றும் தருண் கபூர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *