தி.மு.க. ஹிந்து வாக்கு வங்கியை இழக்கும்:  காங்., செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை!

தி.மு.க. ஹிந்து வாக்கு வங்கியை இழக்கும்: காங்., செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை!

Share it if you like it

ஹிந்துக்களின் வாக்கு வங்கிய தி.மு.க. இழக்கும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் கூறியிருப்பது, கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏறபடுத்தி இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இவ்வாறு பேசினார்: நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை என்றால் ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ஹிந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்.

எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும் என பேசி இருந்தார். ஆ.ராசாவின், இந்த அருவருக்கதக்க பேச்சு ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு, பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தி.மு.க.வை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தன.

இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன், ஹிந்துக்களை இழிவாகப் பேசும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஆ.ராஜா போன்றவர்களின் பிரிவினைவாத பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உரத்த குரலில் கண்டிக்காமல் இருப்பது தான் தேசிய அளவில் காங்கிரஸ் அழிவதற்கும், பி.ஜே.பி. இங்கு வேகமாக வளர்வதற்கு முக்கிய காரணம். இந்த மண் என்றும் ஆன்மீக மண், ஹிந்துக்களை இழித்து பேசும் ராசாவை அடக்கி வைக்காவிட்டால், தி.மு.க. தனது வாக்கு வங்கியை இழந்து விடும், ஆ.ராசாவை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என தினமலருக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். .


Share it if you like it