சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமிய மதகுரு போக்ஸோவில் கைது !

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமிய மதகுரு போக்ஸோவில் கைது !

Share it if you like it

கர்நாடகா மாநிலத்தில் அதிர்ச்சிகரமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு மதரஸாவில் மௌலவி ஒருவர் குர்ஆன் போதிக்கும் பணியை செய்து வந்துள்ளார். அந்த தர்காவில் சிறுமி ஒருவர் மூன்று ஆண்டுகளாக குர்ஆன் வகுப்புக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில்
தன்னிடம் படிக்க வந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று உங்கள் குழந்தைக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும் அதனை விரட்ட சிறப்பு சடங்கு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சடங்கிற்கு சம்மதித்து உள்ளனர். இதனை காரணமாக வைத்துக்கொண்டு சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு செல்லும்போதும் சிறுமியின் சகோதரனை மூளை சலவை செய்து சிறுமியை மட்டும் தனி அறையில் அழைத்து செல்வார்.சிறுமியின் சகோதரனை அறைக்கு வெளியே நிற்க சொல்லி யாரையும் உள்ளே அனுமதிக்காதே என்று கூறியுள்ளார். இதுபோல் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இந்நிலையில் அச்சிறுமி அடிக்கடி வயிற்றுவலி என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர். இதனை தொடந்து
ஜூன் 3 அன்று கர்நாடக காவல்துறை மௌலவியையும் சிறுமியின் சகோதரனையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தகவல்களின்படி, மௌலவி பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரனை மூளைச் சலவை செய்து, அச்சிறுமியை ஆறு மாதங்களுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *