இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Share it if you like it

சீதா – ராமர் திருமணத்தில் ஆஞ்சநேயர் வந்து வணங்கிய காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் பொப்பிலியைச் சேர்ந்த தம்பதி ஸ்ரீஜெகதீஸ்வர ராவ் – சைலஜா. கணவன் மனைவி இருவருமே விரிவுரையாளர்கள். இவர்கள் இருவருமே ஹிந்து பண்டிகைகளை சிறப்பாக கொண்டுவது வழக்கம். குறிப்பாக, ராம நவமி அன்று சீதா – ராமர் திருமணத்தை தவறாது நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், கடந்த ஏப்ரல் 10-ம் ராம நவமி தினத்தன்று, சீதா ராமர் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தி இருக்கிறார்கள். அப்போது, அங்கு வந்த குரங்கு ஒன்று, சீதா – ராமர் திருமணத்துக்கு படைத்திருந்த பிரசாதங்களை சாப்பிட்டுக் கொண்டே, பஜனை பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறது. பின்னர், விரிவுரையாளர் சைலஜாவை கட்டியணைத்து தழுவுகிறது. இதைக் கண்ட கூட்டத்தினர் சீதா – ராமர் திருமணத்தை ஆஞ்சநேயரே நேரில் வந்து கண்டுகளித்ததாகக் கூறி மெய்சிலிர்த்துப் போகிறார்கள். இந்த காட்சியை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோதான் தென் மாநிலங்கள் மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் வைரலாகி வருகிறது.


Share it if you like it