இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் :
இந்தியாவில் சமூகப் புரட்சியை முன்னெடுத்த தலைவர்களில் ஒருவரான புரட்சியாளர் ஐயா திரு எம்சி ராஜா அவர்களின் பிறந்த தினம் இன்று. ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புற வைத்த ஒப்பற்ற தலைவர். மக்களுக்காக உழைத்து, நாடு முழுவதும் அறியப்பட்ட தலைவராக உயர்ந்தவர். சமூகப் புரட்சியாளர், கல்வியாளர், கற்றறிந்த அறிஞர், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகம் படைத்த ஐயா எம்சி ராஜா அவர்களின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும்.