அண்ணாமலைக்கு வி.சி.க தலைவர் வாழ்த்து!

அண்ணாமலைக்கு வி.சி.க தலைவர் வாழ்த்து!

Share it if you like it

வி.சி.க தலைவர் திருமாவளவன் தமிழக பா.ஜ.க தலைவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளன். இவரது, தாயார் பெரியம்மாளுக்கு உடல் நலம் குன்றிய காரணத்தினால் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, கடந்த ஜீன் 25-ஆம் தேதி திருமாவளன் தனது ட்விட்டர் வெளியிட்ட பதிவில், #அம்மா: “ஊர்ல என்ன அநாதையா போட்டுட்டு நீ ஊர சுத்திக்கிட்டுருக்கிற; திடீர்னு எனக்கு நெஞ்ச அடச்சுகிட்டு ஆவி பிரியுற மாதிரி வலி வந்துச்சு; நானே முயற்சி பண்ணி நடுராத்திரில ஆஸ்பத்திரிக்குப் போனேன். உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்” அம்மா இப்படி சொன்னபோது அடிவயிறு கலங்கியது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், கருவாக்கி, கவனமாக உருவாக்கி, கலைகளிலே திருவாக்கி, அன்பூட்டி, அமுதூட்டி, அருந்தமிழ் ஊட்டி ஆளாக்கிய அன்னை தானே, நமக்கு முன்னறி தெய்வம். படைத்து, காத்து, எல்லா நலமும் அளித்த, அன்னை மட்டும்தான் கண்ணுக்குப் புலப்படும் கடவுளின் பிம்பம். அண்ணன் திருமா அவர்களின் தாயார், உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சையில் அறிந்து மனத்துயர் அடைந்தேன். அவர் விரைவில் குணமாகி மீண்டு வந்து அருமைச் சகோதரர் மேல் அன்பைப் பொழிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்தவகையில், வி.சி.க தலைவர் திருமாவளன் கூறியதாவது; அம்மாவின் உடல்நலம் தேறிட அகம்நெகிழ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அன்புக்குரிய பாஜக மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் மாந்தநேய மாண்புக்கு மனமார்ந்த நன்றி. கட்சி அரசியலைக் கடந்து கனிவைக் காட்டும் பண்பு போற்றுதலுக்குரியது. அவருக்கு எனது வாழ்த்துகளும்..நன்றியும்.


Share it if you like it