ராமநாதபுரம் மாவட்டம் கேணிக் கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்த கார்த்திக் தனது பணியை திடீரென ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கருத்து வைரலாகியுள்ளது.தான் மூச்சாக நினைத்து வந்த காவலர் பணியை ராஜினாமா செய்தது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் பூரண சுதந்திரத்திற்கான மாற்றம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையால் தான் நிகழும் என கார்த்திக் தெரிவித்துள்ளார். அண்ணாமலையும் காவலர் துறை பணியை துறந்து அரசியலுக்கு வந்ததாகவும் அவரை, பின்பற்றுவது பெருமையாக உள்ளதாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதனிடையே விதிமுறைகளை மீறியது தொடர்பாக கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேணிக்கரை காவல் ஆய்வாளர் டிஎஸ்பிக்கும் எஸ்பிக்கும் பரிந்துரை செய்துள்ளார்.